தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியின் போது ரேவதி என்ற ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்த நிலையில் பின்னர் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒருநாள் இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன் மறுநாள் காலை விடுதலையானார். அவர் கைது செய்யப்பட்டது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் பின்னணி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதனை தெலுங்கானா முதல்வர் மறுத்தார்.

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சிக்கல்… ஜாமீன் ரத்தாகுமா..? உச்ச நீதிமன்றத்தில் தெலுங்கானா போலீஸ் மேல் முறையீடு..!!இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது தெலுங்கானா காவல்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த என் உயிர் இழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் ஓனர் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த 13 ஆம் தேதி ஹைதராபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் தற்போது இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தெலுங்கானா காவல்துறையினர் வழக்கு தொடர்ந்து உள்ளதால் அல்லு அர்ஜுனுக்கு சிக்கல் உருவாகி அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.