நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில்  உள்ளது. தோனி இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் அணியின் வெற்றிக்காக ஒழுங்காக விளையாடவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. இதனை அடுத்து தோனி ஓய்வு பெற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களும் எழுந்து வருகிறது.  இந்த நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தோனி ஓய்வு பெற வேண்டும் என்று நேரடியாகவே கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஹைடன் கூறுகையில், “இந்த போட்டிக்கு பிறகு தோணி வர்ணனையாளர்கள் குழுவோடு இணைய வேண்டும். அவர் கிரிக்கெட் தொலைத்துவிட்டார். இனி அவ்வளவுதான். இந்த உண்மையை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அவர் விலக வேண்டிய காலம் எப்போது வந்துவிட்டது” என்று கூறியுள்ளார். இது தோனி ரசிகர்களுடைய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.