
சிஎஸ்கே என்றாலே அனைவருடைய நினைவுக்கும் வருவது தோனி தான். அந்த அளவிற்கு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். கடந்த 2008 முதல் 2021 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த Uncapped Player விதியை மீண்டும் கொண்டுவர பிசிசிஐ உடனான ஆலோசனைக் கூட்டத்தில் சிஎஸ்கே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விதியின் படி சர்வதேச வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு பின்னர் uncapped player ஆக வகைப்படுத்தப்படுவர். தோனி அவ்வாறு வகைப்படுத்தப்பட்டால் கூடுதலாக ஒரு இந்திய வீரரை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு சிஎஸ்கேவுக்கு கிடைக்கும். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.