
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பரோட்டா சாப்பிட்டு கொண்டு இருந்தபோது தொண்டையில் சிக்கியதில் கட்டுமான தொழிலாளி சாந்தனன் (40) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விக்கல் ஏற்பட்டதும் தனது தாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீர் கொண்டு வருவதற்குள் சுருண்டு விழுந்து சாந்தனன் மயங்கி கிடந்துள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவருடைய தாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.