
தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி விளக்கம் அளித்துள்ளார். தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு, பிரேமலதா விஜயகாந்துக்கு நேற்று நல்லதம்பி கடிதம் எழுதியிருந்தார்.
தேமுதிகவில் இருந்து விலகுவதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து நல்லத்தம்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.