
மதுரையைச் சேர்ந்த வாலிபர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று நெடும் கண்டம் பகுதியில் இருக்கும் தூவல் அருவிக்கு சென்று சுற்றி பார்த்தனர். அப்போது ஒரு வாலிபர் அருவியில் செல்ஃபி எடுத்த போது கால் தவறி பாறையில் விழுந்தார்.
அதிர்ஷ்டவசமாக பாறையை பிடித்துக் கொண்டதால் அவர் கீழே விழவில்லை. ஆனால் பாறைகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்டு காப்பாற்றுமாறு சத்தம் போட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்களும், உள்ளூர் மக்களும் இணைந்து அவரை சுற்றி கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
தீயணைப்பு துறையினர் வருவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் உள்ளூர் மக்களே சேர்ந்து அந்த வாலிபரை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.