
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நிருபர்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக ஒப்பந்ததாரர் மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இது தொடர்பாக ஏற்கனவே என் காதுக்கு செய்தி வந்தது.
இது சட்டத்தின் ஆட்சி என்பதால் தெய்வத்தின் சன்னிதானத்தில் அமர்ந்து நான் சொல்கிறேன். தவறு செய்பவர்கள் மீது இன்னார் மற்றும் இனியவர் என்று பாராமல் தக்க நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும். மக்கள் எங்களுடைய கவனத்திற்கு கொண்டுவரும் பிரச்சினைகளை குற்றமாக நினைக்க மாட்டோம். மேலும் அவற்றை குறைகளாக நினைத்து நாங்கள் நிவர்த்தி செய்வோம் என்று கூறினார்.