
ஆஸ்திரேலியா நாட்டில் லியானர்டோ அர்பேனா (30) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் வேண்டாம் என்று தூக்கி வீசப்படும் குப்பைகளை சேகரித்து அதன் மூலம் பல லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளார். அதன்படி அவர் ரூ.56 லட்சம் சம்பாதித்துள்ளார். இவர் வீதிகளில் குப்பைகளை சேகரிக்க செல்லும்போது சில பொதுமக்கள் எலக்ட்ரானிக் பொருட்களை வேண்டாம் என்று தூக்கி வீசுகிறார்கள்.
இந்த பொருட்களை அவர் பழுது நீக்கி ஆன்லைனில் விற்பனை செய்து வந்துள்ளார். இதன் மூலம் அவர் வருடத்திற்கு ரூ.56 லட்சம் வரை சம்பாதிக்கிறார். மேலும் பெரிய கனமான கனரகப் பொருட்களை தூக்கி செல்ல கடினமாக இருக்கும் என்பதால் அதை எடுத்துச் செல்ல மாட்டேன் என கூறிய அவர் தனக்கு கிடைக்கும் பணத்தின் மூலம் வீட்டு வாடகை உள்ளிட்ட தன்னுடைய அத்தியாவசிய தேவைகளை தீர்த்துக் கொள்வதாக கூறியுள்ளார்.