திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டம் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். திருவண்ணாமலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்தனர்.

டிசம்பர் 13-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 13-ஆம் தேதி திருவண்ணாமலை மகா தீபத்திற்கு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உரிய அறிவிப்பை வெளியிடுவார். கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான ஆட்கள் மட்டுமே மலை மீது செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.