
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏவின் சிறப்பை அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் கையால் எடுத்துக் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தனது செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது, தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாத பூஜை செய்து அவர்களை கௌரவிக்கும் காணொளியை நாம் பார்த்திருக்கிறோம்.
பள்ளி குழந்தைகளுக்கு உத்திரபிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் பாத பூஜை செய்து அவர்களுக்கு நற்பண்புகள் குறித்து உபதேசிக்கும் காணொளியை பார்த்திருக்கிறோம். ஆனால் அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவரை தனது காலணியை எடுத்து தனது கால் பாதத்தின் அருகில் வைக்க வைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மோசமான செயலை பாருங்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவருமான திரு ராஜ்குமார் எம்எல்ஏ அவர்கள் அங்கு பணியில் இருந்து செவிலியர் ஒருவரை தனது செருப்பை எடுக்க வைத்து தனது கால் பாதத்தின் அருகில் வைக்க செய்த வேதனைக்குரிய நிகழ்வைதான் இந்த காணொளியில் பார்க்கிறோம்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையை கொளுத்துவோம் என்ற மகாகவி பாரதியார் பிறந்த மண்ணில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று திருமதி சோனியா காந்தி அவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கற்றுத் தரவில்லை போலும் என பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாத பூஜை செய்து அவர்களை கெளரவிக்கும் காணொளியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.
பள்ளி குழந்தைகளுக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் பாத பூஜை செய்து அவர்களுக்கு நற்பண்புகள் குறித்து உபதேசிக்கும்… pic.twitter.com/Aps6o0wtKw
— H Raja (@HRajaBJP) November 22, 2024