
உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டம் தில்தார்நகர் பகுதியில் உள்ள ஜகதீஷ்பூர் கிராமத்தில் நடந்த திருமண ஊர்வலத்தில் டிஜேயில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியது. திரிலோக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரிகேடியர் ராமின் மகன் ராகேஷ் ராமின் திருமண ஊர்வலம் ஜகதீஷ்பூரை அடைந்தபோது, DJ இசையில் நடனமாடுவதில் பாரதிகள் மற்றும் கிராம மக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட தகராறில், மணமகனின் தந்தை தாக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜெய்மாலா விழாவிலிருந்த மணமகன் ராகேஷ் வெளியேறி சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு அவரையும் கடுமையாக தாக்கினர். இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மணமகன் ராகேஷின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அவர் வாரணாசி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த வன்முறையின் காரணமாக, திருமணம் நின்ற நிலையில், பாரதிகள் நிகழ்விடத்தை விட்டு திரும்பிச் சென்றனர்.
यूपी के गाजीपुर में डीजे पर डांस को लेकर विवाद हुआ. विवाद के बीच मारपीट हुई, इसी में किसी ने दूल्हे पर हमला कर दिया.
इससे दूल्हे की मौत हो गई. अब इस मारपीट का यह वीडियो आया है. जिसमें दुल्हन घायल दूल्हे का खून पोछ रही है. यह सब कुछ बेहद ही भयावह है. pic.twitter.com/VNkA5OQRWP
— Priya singh (@priyarajputlive) June 7, 2025
இந்த சம்பவம் தொடர்பாக, பிரிகேடியர் ராம் அளித்த புகாரின் அடிப்படையில், எட்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் பதற்றம் நிலவுவதால், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் மணமகனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாலும், இச்சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.