ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு திருமண ஊர்வலம் நடைபெற்றது. இந்த திருமண ஊர்வலம் இரவு 9 மணி அளவில் சென்று கொண்டிருந்த நிலையில் தங்கள் பெற்றோர்களுடன் சென்று கொண்டிருந்த 4 சிறுமிகள் திடீரென ஒதுங்கினர். அப்போது 6 பேர் கொண்ட மர்மகும்பல் அந்த சிறுமிகளை சுற்றி வளைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் சுதாகரித்துக் கொண்ட சிறுமிகள் தப்பி ஓடினர். 3 சிறுமிகள் அவர்களிடமிருந்து தப்பிய நிலையில் ஒருவர் மட்டும் மாட்டிக் கொண்டார்.

அந்த சிறுமியை அவர்கள் ஒரு காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறுமி மயக்கம் அடைந்ததால் இறந்துவிட்டதாக நினைத்து அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதற்கிடையில் தங்கள் மகளை பெற்றோர் தேடி அலைந்த நிலையில் இறுதியாக காட்டுப் பகுதிக்குள் சிறுமியை கண்டுபிடித்தனர். அந்த சிறுமி மயக்கம் தெளிந்ததும் நடந்த விவரங்களை தன் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் அதிர்ச்சி அடைந்து  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்த நிலையில் அவர்கள் அனைவரும் 19 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.