
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோதியில் நேற்று காலை ஒரு வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியாக நடத்தி வைத்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த நிலையில் தம்பதிகளை இரவு முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இன்று நீண்ட நேரம் ஆகியும் புதுமண தம்பதிகள் இருவரும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை தட்டினர்.ஆனால் அவர்கள் திறக்காததால் சந்தேகம் அடைந்து உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மணமகள் படுக்கையிலும் மணமகன் தூக்கில் தொங்கிய படியும் சடலமாக கிடந்துள்ளனர். மேலும் அவர்கள் இறப்பிற்கான காரணம் தெரிய வராத நிலையில் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.