பஞ்சாப் மாநிலம் கிடர்பஹா அருகே உள்ள குருசர் கிராமத்தில், ஒரே குடும்பத்தில் நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு மனைவி தனது கணவர் மற்றும் மாமியாருக்கு விஷம் கலந்த ரொட்டியை உணவாக கொடுத்து கொல்ல முயன்றுள்ளார். இதில் கணவர் உயிரிழந்தார். அதன் பிறகு 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜக்தார் சிங் என்பவர், தனது சகோதரர் ஷிவ்தார் சிங்கை அவரது மனைவி குஷ்மன்தீப்பால் விஷம் கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். ஷிவ்தர் சிங்கும், குஷ்மன்தீப்பும்  கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். ஆனால், குஷ்மன்தீப்புக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்ததால் தன் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 3 பேரில் ஷிவ்தர் சிங் உயிரிழந்தார். அவரது தந்தை சுர்ஜித் சிங், தாய் ஜஸ்விந்தர் கவுர் ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் அவரது மனைவி உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்காதல் சம்பவங்களால் தொடர்ந்து இப்படி கணவன்மார்களை மனைவி கொலை செய்யும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.