கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் சேர்ந்தவர் கிருத்திகா(21). இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன் மனைவி இருவரும் பேசாமல் இருந்தனர் . சமீப காலமாக மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல் இருந்த கிருத்திகா கடந்த 11-ஆம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தானர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கிருத்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திருமணமான 10 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.