
தமிழக அரசு பேருந்துகள் மூலமாக 1.8 கோடிக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்தார்கள். தமிழகத்தின் பல நகரங்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பண்டிகை காலங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று (அக்டோபர் 13) முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்புப் பேருந்து இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, 2 பிரம்மோற்சவம் நடைபெறுவதால் பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி மற்றும் புதுவையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. டிக்கெட் முன்பதிவுக்கு www.tnstc.in இணையதளத்தை பயன்படுத்தவும்.