அதிமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஒருபோதும் மன்னராட்சி எடுபடாது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். திமுக கட்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 20 ஆண்டுகாலம் உழைத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.

பி ஆனால் உதயநிதி ஸ்டாலின் எந்த ஒரு உழைப்பும் இல்லாமல் துணை முதல்வராக ஆக்கப்பட்டுள்ளார். மேலும் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் திமுக அரசு கடன் வாங்கி இலவச பேருந்து பயணம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் கூறினார்.