
சீனாவில் “ஆர்டர் கிங்” என்றழைக்கப்பட்ட யுவான், தனது குடும்பத்தின் நலனுக்காக நாள்தோறும் 18 மணி நேரம் வேலை செய்து, வெறும் 3 மணி நேரம் உறங்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தனது பைக்கிலேயே தூங்கி, ஆர்டர்கள் வந்தவுடன் துரிதமாக செயல்படுவதற்காக ஒவ்வொரு நாளும் போராடினார். இந்த உழைப்புக்காக அவர் தினசரி 40,000 – 48,000 ரூபாய் வரை சம்பாதித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒருநாள் இரவு பகலாக உழைத்த பிறகு பைக்கிலேயே தூங்கிய போது, யுவான் உயிரிழந்தார். அவரின் உடல் மற்றொரு டெலிவரி ஊழியரால் கண்டுபிடிக்கப்பட்டது. தனது 16 வயது மகனின் கல்விக்கும் வாழ்க்கைக்கும் உதவ வேண்டும் என்பதற்காகவே அவர் தினசரி 18 மணி நேரம் இவ்வளவு கஷ்ட்டப்பட்டு உழைத்ததாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம், வேலை அழுத்தத்தின் ஆபத்தையும், உடல்நலத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. யுவானின் மரணம், சமூகத்தில் வேலை மற்றும் வாழ்வு சமநிலையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.