காங்., நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸ் ஒன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல், ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கைப்பற்றிய போலீசார், குடும்பத்தினரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.