சென்னை மாவட்டம் பூந்தமல்லியில் சி.ஆர்.எம் என்ற நகரில் நகராட்சி பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அங்கு தினமும் மாலை நேரத்தில் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். வழக்கம்போல நேற்று மாலை சிறுவர்கள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த மழை காரணத்தால் பூங்காவில் உள்ள மின்கம்பிகளில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

மழை நின்ற பிறகு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் பந்து வைத்து  விளையாடிக் கொண்டிருந்தனர். பந்து மின்கம்பம் அருகில் விழுந்ததால் அதனை எடுக்க ஒரு சிறுவன் சென்றுள்ளார். அப்போது அவர் மின்கசிவு ஏற்பட்ட இடத்தில் கால் வைத்ததால் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது.

அதனைப் பார்த்த மற்றொரு சிறுவன் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது அவரும் மின்கசிவு ஏற்பட இடத்தில் கால் வைத்ததால் அந்த சிறுவன்  மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் அந்தப் பூங்காவிற்கு வரும் மின்சாரத்தை நிறுத்தி இரண்டு சிறுவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இரண்டு சிறுவர்களுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.