பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் சுமார் 170 பயணிகளுக்கு மேல் பயணம் செய்தனர். விமானம் ராஞ்சி அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கழுகு ஒன்று  விமானத்தின் மீது மோதியது.

இதனால் விமானம் ராஞ்சியிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம்  இடையிலேயே தரையிரக்கப்படதாக தெரிகிறது. விமானத்தின் முன்பக்கத்தில் சேதம் ஏற்பட்டது. ஆனால் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.