நாக்பூரில் உள்ள ஒரு வீட்டில், தலையணைக்குள் இருந்து விஷப் பாம்பு ஒன்று வெளியே வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் தூங்க தயாராக இருந்த வேளையில், தலையணையின் உள்ளே பாம்பு நகரும் காட்சியை கண்டு அச்சத்தில் உறைந்தனர்.

அந்த பாம்பு மெத்தைக்கும் மற்றொரு தலையணைக்கும் இடையே ஒளிந்து கொண்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. வீடியோவில், ஒரு பெண் பாம்பு பிடிப்பவர், அதனை மிகுந்த அமைதியுடன் கையாளுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by ❤️❤️‍🔥दीवानी खाटू वाले की❤️‍🔥❤️ (@reenagarg_hr06_)

பாம்பு தாக்க தயாராக இருந்தபோதும், பயமின்றி செயல்பட்ட அந்த பெண் பாம்பை கட்டுப்படுத்தி, அதன் உயிரையும் பாதுகாத்து, அதை காட்டிலும் விடுவிக்க ஏற்பாடு செய்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் பாம்பு மீட்புக் குழுவினர், பாம்பை காட்டிற்கு கொண்டு சென்று விட்டனர். தற்போது நாக்பூர் பகுதியில் பாம்புகள் அதிகம் காணப்படுவதால், இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களை பதற்றத்துக்கு உள்ளாக்குகின்றன.

சம்பவத்தின் தேதி குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை என்றாலும், இது ஒரு வருடம் பழமையானதாக இருக்கலாம் என சில நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். யாரும் பாம்புகளை நேரடியாக கையாள முயற்சிக்காமல், உடனடியாக பாம்பு மீட்புக் குழுவை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.