
மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸில் (LTT) ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலராக பணிபுரியும் ராம் நாராயண் சிங் என்ற போலீசார், மே 30 அன்று ஒருவரின் உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளார்.
அன்றைய தினம் , LTT – கொச்சுவேலி கரிப்ரத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 12201) புறப்பட்டு கொண்டிருந்தது. ஒரு பயணி, நகரும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி ரயிலுக்கும் பிளாட்ஃபார்முக்கும் இடையே விழுந்தார்.
#WATCH | Mumbai: Central Railway RPF Constable Ram Narayan Singh Hailed As ‘Jeevan Rakshak’ For Saving Passenger’s Life At LTT@Yourskamalk #mumbai #mumbainews #RPF #CentralRailway pic.twitter.com/JdlELAW80u
— Free Press Journal (@fpjindia) May 31, 2025
அந்த நேரத்தில் பணியில் இருந்த கான்ஸ்டபிள் ராம் நாராயண் சிங், அந்த பயணியை பார்த்தவுடன் நொடிப்பொழுதில் ஓடி சென்று அவரை வெளியே இழுத்து உயிரைக் காப்பாற்றினார்.
இந்த துணிச்சலான செயலை மத்திய ரயில்வே உயர்மட்ட அதிகாரிகள் பாராட்டினர். “ராம் நாராயண் சிங்கின் செயல் ஒரு மனிதநேயத்தின் பிரதிபலிப்பு. அவருக்கு ‘ஜீவன் ரக்ஷக்’ பட்டம் வழங்கப்படும்” என தெரிவித்தனர். இந்த சம்பவம், ரயில்வே பாதுகாப்பு பணியாளர்கள் எவ்வளவு விழிப்புடனும் மனதார அர்ப்பணிப்புடனும் பணியாற்றுகிறார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.