
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 10-ம் வகுப்பு வரையில் படித்த நிலையில் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்க்கிறார். அப்போது சிவக்குமார் என்ற ஒரு வாலிபரை சிறுமி காதலித்துள்ளார். இந்த வாலிபர் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அந்த சிறுமியும் வாலிபரும் 6 மாதமாக காதலித்து வந்த நிலையில் திருமண ஆசை காட்டி வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வாலிபர் சிறுமியை ஒரு பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த நிலையில் நேற்று முன்தினம் காலை கள்ளிக்குடிக்கு மீண்டும் இவர்கள் வந்தனர். பின்னர் அங்கு சிறுமியை ஒரு இடத்தில் நிற்க சொல்லிவிட்டு தாலி வாங்கி விட்டு வருகிறேன் என்று கூறி சிவக்குமார் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வாலிபர் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிறுமி கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள சிவக்குமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.