நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 4 வயதில் மகள் உள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு 4 வயது சிறுமி தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தாத்தா தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் தாத்தாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சிறுமியின் தாத்தாவுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.