மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை பஜார் பகுதியில் 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டுமான பணிகளை தொடக்கி வைத்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சைதாப்பேட்டையில் மக்கள் நலத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிய கட்டமைப்புகளை தமிழக அரசு மேம்படுத்துகிறது. தற்போது சென்னை சைதாப்பேட்டையில் துவக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல் என மக்களை ஏமாற்றுவதாக திமுக குறித்து விஜய் கடுமையாக விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது, திமுகவில் உள்ளவர்கள் திமுகவை பற்றி அறிந்தவர்கள். ஆனால் திமுகவின் தேவை ஒரு முகநூல் நூற்றாண்டாய் கடந்து தமிழ்நாட்டுக்கு எத்தகைய வகையில் பணியாற்றி கொண்டுள்ளது என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். திமுகவை தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் சைதாப்பேட்டையில் வளர்ச்சி பணிக்கு ஒரு துரும்பை கூட எடுத்துப் போட்டது கிடையாது.

சைதாப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் சாலை வசதிகள், குடிநீர் மாற்று வாரிய குடியிருப்புகள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை பொறுப்பிற்கு வந்த பிறகு செயல்படுத்தினார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுகவால் வளர்ச்சி என்பது உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே எங்கள் நோக்கம் வளர்ச்சி குறித்தும் மக்களின் அவசிய தேவைகள் குறித்தும் தான் இருக்கும். மற்றவற்றில் எங்கள் கவனம் சிதையாது சிதறாது என கூறியுள்ளார்.