தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான தளபதி விஜய்யை வைத்து செல்வா, நிலவே வா, பகவதி ஆகிய 3 திரைப்படங்களை ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார். அதிலும் குறிப்பாக தளபதியை வைத்து பகவதி படத்தை இயக்கி விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக திருமலை படத்திற்கு முன்னதாகவே அறிமுகம் செய்தார் வெங்கடேஷ். அந்த படம் தான் விஜய்யின் ஆக்சன் அவதாரத்திற்கு அடித்தளம் போட்டது என்றே கூறலாம்.

இந்நிலையில் பகவதி திரைப்படத்தின் சூட்டிங்கின்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் குறித்து வெங்கடேஷ் மனம் திறந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ஒரு முறை பகவதி படத்தின் சூட்டிங்போது விஜய் செய்த காரியம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதாவது படப்பிடிப்பில் இடைவெளியின் போது நான் ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு ரவுண்டு சென்றேன். அப்போது ஒரு ஓரத்தில் சாலையில் தரையில் விஜய் ஒரு துண்டை விரித்து படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அதை பார்த்த எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எனினும் விஜய் உறங்கிக்கொண்டிருந்ததால் அவரை எழுப்ப எனக்கு மனம் வரவில்லை” என வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.