
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சிலர் குடிபோதையில் செய்யும் அட்ரா சிட்டிகளை சொல்லவே வேண்டாம். மது போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சிலர் செய்யும் வேலைகள் சில சமயங்களில் நகைச்சுவையாகவும் கண்டனத்திற்குரியதாகவும் மாறிவிடுகிறது.
அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஈரோடு மாவட்டத்திலுள்ள கனி மார்க்கெட் முன்பாக ஒருவர் மதுபோதையில் நடந்து சென்றார். இவர் தள்ளாடியபடியே சுற்றிக்கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கிருந்த நோ பார்க்கிங் போர்டினை எடுத்துக்கொண்டு சென்றார். அந்த நபர் அந்த போர்டை தன் தோளில் சுமந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்து நெட்டின்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.