
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தேர்தலில் எங்களுக்கு கூட்டணி என்பதே கிடையாது. நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். தீமைக்கு தீமை மாற்று கிடையாது. தீமைக்கும் நன்மைதான் மாற்று. நன்மையை வைத்து தீமையை ஒழிப்பேன் என்றார் நபிகள் நாயகம் கூறினார்.
அதேதான் இறைமகன் இயேசு கிறிஸ்துவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் போதித்தார்கள். பாஜகவை ஒழிக்க வேண்டும் என திமுக கூறுகிறது. திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற அதிமுக கூறுகிறது. இவர்கள் அனைவரையும் ஒழிக்க வேண்டும் என்று கூறுவது தான் எங்கள் அணி. நாங்கள் தனித்து நின்று மக்களுக்காக போராடுவோம்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் தேர்தலுக்கு முன்பே திறந்தார்கள். அதே தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிற்க வைத்து பாஜகவை வீழ்த்தினார். அதோடு அவர்களது ராமர் அரசியல் தோல்வியடைந்தது.
பூரி ஜெகன்நாதரை வைத்து ஒடிசாவிற்குள் நுழைந்தார்கள். தமிழன் ஒடிசாவை ஆள்வதா? என கேட்டவர்கள் என்று தமிழ் கடவுளை தொடுகிறார்கள். கேரளாவில் ஐயப்பனை தொட்டும், தமிழ்நாட்டை சிவபெருமானை தொட்டும் பார்த்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இறுதியாக தமிழர்களின் வாக்குகளை பறிக்க தமிழ் கடவுள் முருகனை தொடுகிறார்கள். தமிழ் கடவுளுக்கு முன்னால் அவர்களால் தமிழில் திருப்புகழ், திருமுருகாற்றுப்படை பாடல் முடியுமா? அவர்கள் செய்ய மாட்டார்கள். அதில் ஒரு அரசியல் இருக்கிறது என சீமான் கூறியுள்ளார்.