சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டை அமைச்சர் சுப்பிரமணியன் என்ற தொடங்கி வைத்த நிலையில் அதன் பிறகு பேசிய அமைச்சர், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19 முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளார்.

அதே சமயம் தமிழக மருத்துவத்துறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இவை அனைத்தும் எம்ஆர்பி தேர்வில் தேர்வானவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் அடுத்த ஒரு மாதத்திற்குள் பணியிடம் நிரப்பப்பட்டு தேர்வாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.