
தமிழகம் முழுவதும் இன்று மின்வாரிய சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அதன்படி இன்று காலை 11 மணி முதல் காலை 5:00 மணி வரையில் அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இன்றைய தினம் பொதுமக்கள் மின் கட்டணம், குறைந்த மின்னழுத்தம் மற்றும் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்டவைகள் குறித்து புகார் கொடுக்கலாம்.
இன்றைய தினம் கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே மின்வாரிய நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் அவர்கள் இந்த முகாமை கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.