தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஒருசில பள்ளிகளில் நடைபெற்று வரும் நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை கண்காணிக்க சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரமகுடி ஆரிய வைஸ்ய மேல்நிலைப் பள்ளிக்கு எதிராக கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி, “பல கல்லூரிகளில் இப்படியான குற்றச்சாட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளையும் அரசு கண்காணிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.