
தமிழகத்தில் மினி பஸ்கள் இயங்குவதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்படுவதற்கான புதிய வரைவு திட்ட அறிக்கையை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கடந்த சில வருடங்களாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் மீண்டும் மினி பஸ்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல் எந்தெந்த வழித்தடங்களில் இயங்குவது என்பது குறித்து RDO கள் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்கப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுபோன்ற சூழலில் மினி பஸ்கள் இயக்கப்படுவது மக்களின் சிரமத்தை குறைக்கும் என்பதால் இந்த செய்தி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.