தமிழகத்தில் மனைகளை வரன்முறை செய்வதற்காக விண்ணப்பிக்க வேண்டிய இணையதளத்தை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனுமதி ஏற்ற மனை பிரிவு மற்றும் மனைகளை வரன்முறை படுத்தும் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்பு பதிவான விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனை பிரிவுகளை வன்முறைப்படுத்தி மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென ஏற்கனவே விதிமுறைகள் வகுக்கப்பட்ட நிலையில் அந்த விதிகளுக்கு உட்பட்டு மனை வரன்முறை செய்வதற்கான விண்ணப்பங்களை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரை பதிவு செய்யலாம் எனவும் இதற்காக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.