திருச்சி மாவட்டம் பச்சைமலை தோனூர் கிராமத்தில் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த பரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொது சட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

அதாவது பரத் CLAT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த நிலையில் திருச்சியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படிக்க இருக்கிறார்.

இந்த மாணவன் நுழைவு தேர்வில் எஸ்டி பிரிவில் 964 வது இடம் பிடித்த நிலையில் தற்போது சட்டப்படிப்புக்கு தேர்வாகியுள்ளார். இவர் ஜெய் பீம் படம் பார்த்து சட்டம் படிக்க விருப்பப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

இவர் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சட்டப் படிப்பு படிக்கும் முதல் பழங்குடியின மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் முன்னதாக கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னை ஐஐடி மெட்ராஸில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.