தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிகோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான பார்மசாலா உள்ளிட்ட புகைப்படம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவை. அதனால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் கடந்த 2011 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தடை முடிவடையும் நாளிலிருந்து அடுத்த ஆண்டுக்கு புதிதாக தடை விதிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குட்கா மற்றும் புகையிலை பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு மேலும் ஓர் ஆண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.