தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளியிள் நேற்றோடு சுமார் 1000 ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றார்கள். நடப்ப கல்வி ஆண்டு தொடங்கி சில நாட்களே ஆகும் நிலையில் ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை ஓய்வு பெற்ற ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்கி அவர்களை மறுநியமனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நடப்பு கல்வி ஆண்டு முடியும் வரை தொடர்ந்து கற்பித்தல் பணியை மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.