இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே டிக்கெட் அனைத்தும் புக்காகி விடுகிறது. இதனால் தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே தட்கல் முறையில் எப்படி எளிய முறையில் டிக்கெட்டுகளை பெறுவது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

அதன்படி தட்கல் முறையில் டிக்கெட் புக்கிங் செய்ய அதிவேக இணையதள இணைப்பில் டெக்ஸ்டாப் அல்லது லேப்டாப்பில் புக் செய்ய முயற்சிக்க வேண்டும். பயணிகளின் விவரங்களை காலையிலேயே ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் லாகின் செய்து மாஸ்டர் லிஸ்டில் சேர்த்து விட வேண்டும். ஐ ஆர் சி டி சி வாலட் பேமென்ட் மோடில் டிக்கெட்டுக்கான பணத்தை போட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு பிரச்சனை இல்லாமல் டிக்கெட் பணம் சரியாக சென்றடையும். எனவே இனி தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்ய இந்த முறையை பின்பற்றுங்கள்.