
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேம்பாலத்தில் ஏழு பேர் கொண்ட கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் பயணித்தவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.
இதனால் கார் பயங்கர விபத்துக்குள்ளாகி காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.