மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மால்டா பகுதியில் மருமகனை அத்தை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த பகுதியில் மௌமிதா ஹசன் நவாப் என்ற பெண் வசித்து வருகிறார். இவரது மருமகன் சதாம் நவாப். இவர்கள் இருவரும் திருமணத்தை மீறிய உறவிலிருந்த நிலையில் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இவர்கள் தகாத உறவில் இருக்கும் நிலையில் சில காலங்களாக மருமகன் மாமியாரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென கடந்த மாதம் 18ஆம் தேதி சதாம் காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் போது மௌமிதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து கிடுக்கு பிடி விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சியூட்டம் தகவல்கள் தெரியவந்தது.

அதாவது அவர் தன் மருமகனை கொலை செய்து உடலை 3 துண்டுகளாக வெட்டி தன் தந்தையின் வீட்டு சுவர்களில் சிமெண்ட் போட்டு மூடி விட்டதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டுள்ளனர். அதாவது உல்லாசமாக இருந்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மருமகன் மிரட்டியதால் கோபத்தில் அவரை கொன்று புதைத்ததாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அவரது மருமகன் ஒரு கட்டிட ஒப்பந்ததாரராக இருந்த நிலையில் அவரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கொலைக்கான காரணம் நிதி சார்ந்த பிரச்சினைகள் கூட இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.