
சமீபத்தில் விஜய் ஹசாரே கோப்பை தொடர் முடிந்தது இந்த தொடரில் கர்நாடகா அணி சேம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 779 ரன்கள் எடுத்த கருண் நாயர் தொடர் நாயகன் என்ற விருதை பெற்றார்.
இதனால் இவர் சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான அணியில் இடம்பெறுவார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அணியில் கருண் நாயர் இடம் பெறவில்லை.
இது குறித்து கருண் நாயர் கூறுகையில் “சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான அணியில் எனது பெயர் பரிசீலிக்காததற்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதுதான் எனது கனவு. அது மட்டும் தான் எனது மனதில் இருக்கிறது. இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன்” என கூறியுள்ளார்.