அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்த அழைத்துவரப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் மேலும் சதியை முறியடிக்கும் வகையில் டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மதுபான கொள்கை வழக்கில் தன்னை சிக்க வைக்க வேண்டும் என்றே செயல்பட்டுள்ளது அமலாக்கத்துறை எனவும் தெரிவித்துள்ளார்.