வேலூர் மாவட்டம் குள்ளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவரது மனைவி பிரியா(35). இந்த தம்பதியினருக்கு ப்ரீத்தி(10) என்ற மகளும் ரபீஸ்வரன்(5) என்ற மகனும் இருந்துள்ளனர். இவர்களது வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் புதிதாக மாடி வீடு கட்டி வந்தனர்.

புதிதாக கட்டி வரும் வீட்டின் குடிநீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக 7 அடி ஆழமுள்ள இரண்டு குழிகள் வெட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக அந்த குழிகளில் தண்ணீர் நிரம்பி குட்டை போல காட்சி அளித்தது.

நேற்று மாலை ப்ரீத்தையும், ரபிஸ்வரனும் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த குழிகளில் நிரம்பி இருந்த தண்ணீரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். விளையாட சென்ற குழந்தைகள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பிரியா அங்கு சென்று தேடிப் பார்த்தார்.

அப்போது குழந்தைகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்தி வருகின்றனர்.