
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதி சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் வினோத் குமார்(22). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வினோத்குமாருக்கு சொட்ட தட்டியைச் சேர்ந்த பவித்ரா(18) என்பவரை பெண் பார்த்தனர்.
ஜாதகம் பொருந்தவில்லை என்பதால் இரு வீட்டாரும் திருமண பேச்சை நிறுத்தினர். ஆனால் பெண் பார்க்கும் போதே ஒருவரை ஒருவருக்கு பிடித்து விட்டது. இதனால் குடும்பத்தினருக்கு தெரியாமல் மார்ச் மாதம் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சுப்பையா புதுமண தம்பதியை தனது வீட்டு மாடியில் குடியமர்த்தினார். இருப்பினும் சுப்பையாவும், அவரது மனைவியும் அடிக்கடி திட்டியதால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார், பவித்ராவும் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.