தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் ஹீரோ மற்றும் காமெடி வேடங்களில் நடிகர் சூரி நடித்து வருகிறார். இந்நிலையில் ‌ இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள். எங்கு தவறு நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. ஜனநாயக கடமையை என்னால் ஆற்ற முடியவில்லை என்பதை நினைக்கும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. மேலும் வேதனையுடன் கூறுகிறேன் அனைவரும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்று கூறினார்.