
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இந்த வீடியோக்களை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்று கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளது. ஒரு பெரிய கரடி இடம் இருந்து தனது செல்ல நாயை காப்பாற்ற நபர் ஒருவர் அசாத்தியமான தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு நபரும் அவரின் செல்லமான வளர்ப்பு நாய்க்குட்டியும் வீட்டின் முற்றத்தில் ஜாலியாக விளையாண்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பெரிய கரடி நாய் குட்டியை தாக்க முயன்றது. அதனைப் பார்த்த அந்த நபர் ஒரு கணமும் தாமதிக்காமல் நாயை காப்பாற்ற கரடையின் மீது பாய்கிறார். பெரிய கரடியிடம் சிறிதும் அச்சம் இல்லாமல் தன் நாயை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு மட்டும் அவர் செயல்படுகிறார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க