
பிஹார் மாநிலம் பாட்னாவில் ரவிசங்கர் சர்மா மற்றும் அவரது நண்பர் விக்கி குமார் ஆகிய இருவரும் கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்தனர். அதன்படி இருவரும் தேர்வு எழுதுவதற்காக ஆரா ஜெயின் பள்ளி தேர்வு மையத்திற்கு சென்றனர். அப்போது அங்கு தேர்வு மையத்தில் முறைகேடு ஏற்படாத வகையில் அமைதியான சூழலில் தேர்வு நடத்தப்படுவதற்காக காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து சர்மா மற்றும் குமாரை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அவர்கள் காலணிகளில் ப்ளூடூத் சாதனத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பின் அதிகாரிகள் இருவரையும் அதிரடியாக கைது செய்ததுடன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தேர்வு மையத்தில் காவல் கண்காணிப்பாளர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்ததால் இந்த மோசடி முறை கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர். மேலும் கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்து தேர்வு நகரில் உள்ள 18 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டதாகவும் இதில் சக்கரவர்த்தி முறை மூலம் தேர்வு நடத்தப்பட்டதால் முறைகேடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்ததாகவும் கூறினார். அதன்பின் மோசடி செய்தவர்களை கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.