முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட இவருக்கு மீண்டும் இதய வால்வுகளில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட உள்ளது. உடல்நல குறைவு காரணமாக புழல் சிறையிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இதயவியல் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாக்கியுள்ளது.