பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் பாடகர் அஜய் கிருஷ்ணா. இவருக்கு தமிழகத்தில் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அற்புதமாக பாடக்கூடியவர்.தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் வரக்கூடிய  போட்டிகளுக்கு பாடல் பாடிக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஜெசி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகான ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஜய் கிருஷ்ணா தன்னுடைய மகனின் இரண்டாவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். இதன் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த இணையவாசிகள் அனைவரும் அஜய் கிருஷ்ணா மகன் வார்ந்துவிட்டாரே என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.