தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரையுலகில் தனுஷ் வலம் வருகிறார். இயக்குனராக தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.

அதனை தொடர்ந்து நான்காவதாக இட்லி கடை என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரகனி, அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமுத்திரகனி அவர்கள் தனுஷ் பற்றி பேசியபோது, “தம்பி தனுஷ் ராயன் படம் வெளியான இரண்டாவது நாளிலேயே என்னை அழைத்து பத்து நாளில் ரெடியாக இருங்கள் படப்பிடிப்பிற்கு போகிறோம் கால்ஷீட் கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டார்.

அவர் சொன்னது போன்றே இட்லி கடை படத்தின் கதையை கூறினார், பத்தாவது நாளில் படபிடிப்பில் இருந்தோம். இவை சினிமா மீது தனுசுக்கு இருக்கும் காதல் என்று சொல்வதைத் தவிர வேறு எப்படி சொல்வது?” எனக் கூறியுள்ளார்.